search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
    X

    கோப்பு படம் 

    மார்த்தாண்டம் தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

    • மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலையில் பள்ளியை திறக்க நிர்வாகிகள் வந்தபோது பள்ளியின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி அலுவலகத்தில் சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் சி.பி.யு. மற்றும் ஹோம் தியேட்டர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×