search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணை தொகையை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம் 

    கருணை தொகையை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்

    • கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது
    • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் 5 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும், பொது வினியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்க வேண்டும், பண்டிகை காலம் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சவுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் தங்கமோகன், ராஜேஷ், மேரி சுபா, கிறிஸ்டோபர், ராபின்சன், தெய்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். பத்மகுமார் நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×