search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 11-ந் தேதி  3 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்
    X

    அனைத்து கட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    குமரி மாவட்டத்தில் 11-ந் தேதி 3 இடங்களில் மனித சங்கிலி போராட்டம்

    • காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனை.
    • விஜய் வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது . குமரி மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி பகலவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும், வடசேரியில் இருந்து கோட்டார் வரையிலும், தக்கலை பஸ்நிலையத்தில் அழகிய மண்டபம் வரையிலும், குழித்துறையில் இருந்து களியக்காவிளை வரையிலும் வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×