என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் போலீசார் சோதனை
- குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று மாலை குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்'என அறிவுறுத்தி சென்றனர்.இது போல் திங்கள்நகர், பேயன்குழி பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் அவர் சோதனை செய்தார்.இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்