search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
    X

    சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

    • சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • வாங்கல் காவேரி ஆற்று பகுதியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல், காவிரியாற்று பகுதியில் சீமைகருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாங்கல், காவிரியாற்று பகுதியில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. தற்போது, காவிரியாற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. இதனால், நீர்த்தேக்க கிணறுக ளுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பல கிராமங்களுக்கு போதிய, காவிரி குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. எனவே, நீர்சேமிப் புக்கு பாதகமாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×