search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார வாரிய ஊழியர் திடீர் சாவு
    X

    மின்சார வாரிய ஊழியர் திடீர் சாவு

    • மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்தார்
    • இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக (எல்ஐ) பணியாற்றி வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் மூலிமங்கலம் செல்லும் பிரிவு சாலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×