search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதிலமடைந்த நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை
    X

    சிதிலமடைந்த நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை

    • சிதிலமடைந்த நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை
    • கரூர் சர்ச் கார்னர் பகுதியில்

    கரூர், அக். 7

    கரூர், சர்ச் கார்னர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் நகரின் முக்கிய பகுதி என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பஸ் மூலம் பொதுமக்கள் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வாங்கல், நெரூர், மண்மங்கலம், வாங்கப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும், சர்ச் கார்னர் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பயணிகள் நிழற்கூடத்தின் உட்புறமும், மேற்புற பகுதிகளும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத அளவுக்கு நிழற்கூடம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×