என் மலர்
உள்ளூர் செய்திகள்

தன்னார்வலர்களுக்கு பயிற்சி
- தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது
- தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டது
கரூர், பிப். 3-
கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்தில், இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியானது இரும்பூதிப்பட்டி. மாயனூர், கிருஷ்ணராயபுரம், சின்ன சேங்கல், குப்பமேட்டுப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் அளிக்கப்பட்டது. இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் கடினப்பகு எப்படி என்ற தலைப்புகளிலும், ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கற்றல் விளைவுகள் அடிப்படையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகள், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையம் சார்பில் செய்யப்பட்டது.
Next Story