search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரிங் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    சென்ட்ரிங் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • சென்ட்ரிங் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • மனைவி பிரிந்து சென்றதால் சம்பவம்

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம், மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கோகுல மன்னன் (வயது 17). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. அவரது மனைவி, பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்த கோகுலமன்னன், குளித்தலையில் உள்ள தனது அம்மாச்சி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×