search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து : ஊராட்சி செயலாளர் பணிநீக்கம்
    X

    மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து : ஊராட்சி செயலாளர் பணிநீக்கம்

    • மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் ரத்தினமாலா ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராம ஊராட்சி யில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடுகள் 1 முதல் 31 பதி வேடுகள் முறையாக பரா மரிக்காதது, மற்றும் ஊராட்சியின் தீர்மானம் செலவினசீட்டுகள் இல்லா மல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

    மேலும், இந்த குறை பாடுகள் காரணமாக 1994 -ம் ஆண்டுதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (அ) மற்றும் பிரிவு 206(1) (அ) -ன் கீழ்ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டம் 1994-ம் ஆண்டு பிரிவு 203-ன்படி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் கை யொப்பமிடும் அதிகா ரத்தினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப் பணிகளை கவனிக்க தவறிய சம்மந்தப்பட்ட அலு வலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும், இது போன்று ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடு வோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×