search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணை சாலை ஆக்கிரமிப்பு குறித்த சர்வே பணி தொய்வு
    X

    பேரணை சாலை ஆக்கிரமிப்பு குறித்த சர்வே பணி தொய்வு

    • பேரணை சாலை ஆக்கிரமிப்பு குறித்த சர்வே பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் வேலை செய்ய ஆட்கள் இல்லை.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து அறிக்கை தாக்கால் செய்ய வருவாய்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து முள்ளிப்பள்ளம் கிராம பகுதிகளில் முதல் கட்ட சர்வே பணிகள் முடிந்தது. 2-ம் கட்டமாக குருவித்துறை சித்தாயிபுரத்தி லிருந்து மன்னாடிமங்கலம் வரை சர்வே செய்யும் பணியை வட்ட அளவை யாளர் சந்திரா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முபாரக், முத்துகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. ஆனால் உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியின்போது அளவு டேப் பிடிக்க மற்றும் எல்லை குறியீடு வேலை செய்ய ஆட்கள் இன்றி தொய்வு ஏற்பட்டு உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியை துரிதபடுத்தி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    Next Story
    ×