search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்ததையும், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் படத்தில் காணலாம். 

    சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    • சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தா னத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.

    கடந்த 30-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதை யொட்டி 4 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் ஸ்ரீசேவுகப் பெருமாள் அய்யனாருக்கு மட்டும் தனியாக 33 குண்டங்களும், பரிவார தேவதைகளுக்கு 8 குண்டங்களும் என 41 குண்டங்கள், 91 சிவாச்சாரியார்களை கொண்டு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. இன்று காலை மங்கள இசை, தமிழ் திருமறை மண்டப சாந்தி,பிம்பசுத்தி,லட்சுமி பூஜை,கோ பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி ஸபர்ஷாகுதி நாடி சந்தானம் மஹா பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றியுள்ள தேரோடும் 4 ரத வீதியில் வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் நவகிரகம் பிடாரி அம்மன் சன்னதி, கணபதி சன்னதி, முருகப்பெருமான் சன்னதி, சுயம் பிரகாஷ்வரர் சன்னதி, அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி உள்ளிட்ட கர்ப்ப கிரகங்களின் விமானங்கள் தங்க கவசங்களால் வேயப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×