search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி சனீஸ்வரன் லிங்கம், நந்திகேசுவரர், சிவனுக்கும் பால், தயிர் உள்பட 12 வாசனை பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகளும் நடந்தது. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவரும், எம்.வி.எம்.குழும தலைவருமான மணிமுத்தையா,

    கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×