search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
    X

    2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

    • மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பா ண்டி கா ம்பவு ண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவ ரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் சண்முகபாண்டி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×