search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகா சண்டியாகம்
    X

    மகா சண்டியாகம் நடைபெற்றது.

    தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகா சண்டியாகம்

    • பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மகாசண்டி யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு உகந்த தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், கொண்டு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியா ர்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×