என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சீலநாயக்கன்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
Byமாலை மலர்3 Feb 2023 9:45 AM GMT
- சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
- அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X