search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பாவூர்சத்திரம் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்

    • மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகள், குடிநீர், சாலைவசதி, சுகாதாரத்தை பேணி காக்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கான தினக்கூலியாக ரூ.478 வழங்கிட கோரியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட கோரியும், பூலாங்குளம் ஊராட்சியில் போலியான வீட்டு ரசீதுகள் அச்சிட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து.

    பாவூர்சத்திரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாவட்ட தலைமை குழு உறுப்பினர் வேல் முருகன், சுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாடசாமி, மாதவன், வேலு, பேச்சிமுத்து மற்றும் பீடி சங்கத்தலைவர் அய்யம்பெருமாள், விவசாய சங்க தலைவர், சமூக ஆர்வலர் திருமுருகன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அண்ணாதுரை, சிவராஜன், முத்துலட்சுமி, ராமசாமி, பாலசுப்பிரமணியன், கருப்பையா, அரிச்சந்திரன், நடராஜகுமார், சரவண விநாயகன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சுடலை மாடன், சின்னபாண்டியன், பீடி சங்க தலைவர் ஆறுமுகராஜ், கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராமர்பாண்டியன், கட்டுமான சங்க தலைவர்கள் குமார், பலவேசம், பூலாங்குளம் சக்திவேல் முருகன், ராமநாடன், செட்டியூர் மாரியப்பன் மற்றும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள்,பெண்கள் உள்பட78 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். கீழப்பாவூர் ஒன்றிய பகுதி ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×