search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் பகுதி அ.தி.மு.க.  புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசிய காட்சி.

    மேலப்பாளையம் பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

    • மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பி னர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்ப ட்டது. கூடுதலாக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆதித்தன், சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்ணேஷ் மற்றும் பகுதி, வட்ட செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×