search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதல் : தனியார் கம்பெனி  ஊழியர் சாவு
    X

    பலியான  ெஜயபால்

    மோட்டார் சைக்கிள்கள் மோதல் : தனியார் கம்பெனி ஊழியர் சாவு

    • ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்தை சேர்ந்த வர் காத்தவராயன் மகன் ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் தினந்தோறும் பேரணியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூல மாக வேலைக்கு சென்று விட்டு திரும்பி பேரணி கிரா மத்துக்கு செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழுதா வூரில் நடைபெற்ற தனது நண்பர் விசேஷத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் மூலமாக பேரணி நோக்கி சென்று கொண்டி ருந்தார்,

    விக்கிரவாண்டி போலீஸ் கோட்டர்ஸ் அருகே செல்லும் பொழுது முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சென்றவர் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஜெயபாலுக்கு சாந்தி என்ற மனைவியும் சக்தி என்ற மகளும் உள்ளனர்.

    Next Story
    ×