search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு நீலகிரி தேயிலையை நேரடியாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
    X

    ஆஸ்திரேலியாவுக்கு நீலகிரி தேயிலையை நேரடியாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

    • கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    • பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை.

    நீலகிரி,

    கோவை மாவட்டம் கோத்தகிரிக்கு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த குழுவில் டாக்டர் ஜெகதீஷ், டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் நேற்று கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அவர்களுக்கு படுகர் இன மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை பார்வையிட்டனர். அங்கு உள்ள பல்வேறு வகை தேயிலை தூளின் ரகங்களை அறிந்த அவர்கள், தேநீர் குடித்து வித்தியாசம் அறிந்து கொண்டனர். அதன்பிறகு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழகம்- ஆஸ்திரேலியா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் பிரதானமாக உள்ளது. ஆனால், இங்கு விளையும் பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. எனவே இங்கு உற்பத்தியாகும் தேயிலைத்தூளை இடைத்தரகர் இன்றி நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதுதவிர தேயிலை ஆலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து படுகர் இன மக்களின் கலாச்சார நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் படுகர் இன பாரம்பரிய உடை அணிந்து, இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். அப்போது ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் படுகா மொழி யில், அனைவரும் நல்லா இருக்கீங்களா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார். இதனை கேட்ட பழங்குடி மக்கள் கைதட்டி வரவேற்ற னர். இதனை தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியஎம்.எல்.ஏக்கள் குழுவினர், பழங்கு டியின மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×