search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது

    • கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது குள்ளன்கொட்டாய் . இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). இவர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதாக கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது நிலத்தில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா செடி இருந்தது தெரிய வந்தது-இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதே போல கஞ்சா செடிகளை பயிரிட்ட பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதே போல மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்ற பாலதொட்டனப்பள்ளி பூஞ்சோலை (45), பருவீதி மனோகரன் (50), வேடியப்பன் (50), ஜெகதேவி தேவபிரதாசா (49), கோவிந்தன் (50), நாயக்கனூர் குமரேசன் (70) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×