search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அருகே புதிய டிரான்ஸ்பார்மர்
    X

    பர்கூர் அருகே புதிய டிரான்ஸ்பார்மர்

    • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • மதியழகன் கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து பயன்பாட்டிற்காக மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காத்தாடிகுப்பம் கிராமம் மற்றும் எலத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாக அந்த பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று ரூ. 10 லட்சம் மதிப்பில் புதியதாக ட்ரான்ஸ்பார்மர் காத்தாடி குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய அதிகாரி ஏஞ்சலா சகாயமேரி தலைமை வகித்தார். மின்வாரிய அதிகாரிகள் இந்திரா, நாகராஜ், சுப்பிரமணி, செல்வம், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து பயன்பாட்டிற்காக மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, அஸ்லம், பாலேப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ஜெசிந்தா வில்லியம், குட்டி, ஸ்டாண்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×