search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
    X

    சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்ட காட்சி.

    சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

    • தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
    • 20 சதவீத தள்ளு படியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

    சேலம்:

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் முக்கிய இடங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி வருகிற 21.10.2022 வரை 15 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம், தெரிவித்துள்ளதாவது:- 60 அரங்குகள் அமைய பெற்றுள்ள இக்கண்காட்சி யில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, வேலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருப்பூர், கரூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், கடலூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் அப்ப குதியில் உள்ள கைதேர்ந்த நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் மென்பட்டு சேலைகள் பெட்சீட்கள், ஜக்கார்டு மற்றும் பிளைன் ரக போர்வைகள் அலங்கார விரிப்புகள், பருத்தி ரக சேலைகள், கோரா சேலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், ஜமக்காளம் ஆகிய கைத்தறி ரக ஜவுளிகள் கைத்தறி விற்பனை கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளது.அனைத்து கைத்தறி ரகங்கள் அரசு வழங்கும் 20 சதவீத தள்ளு படியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. சுமார் ரூ.50 லட்சம் அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவ சம். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கும் 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறித்துணிகளை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் (பொ) ஸ்ரீ விஜயலட்சுமி, நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×