search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவுர்ணமி, தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    பவுர்ணமி, தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடக்கப்பட்டுள்ளது.
    • சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-

    பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்தி லிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டி லிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலர்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலர்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூ ருக்கும், சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது. ஆகவே பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×