search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாண்டியாபுரம்  ஆரம்ப பள்ளிக்கு இருக்கைகள்- ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டபோது எடுத்த படம்.

    பாண்டியாபுரம் ஆரம்ப பள்ளிக்கு இருக்கைகள்- ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

    • பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டியாபுரம் அரசு ஊராட்சி பள்ளிக்கு தென்காசி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கான இருக்கைகள் மற்றும் மேசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். இதில் எம். பி. நிதியிலிருந்து வழங்கப்பட்ட இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. பள்ளிக்கு வழங்கினார்.

    இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி, பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி, கவுன் சிலர் அருள்சீலி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, துணைச் செயலாளர் வினுச்சக்கர வர்த்தி, எம்.எல்.எஸ். பிரேம்குமார், தங்கையா, சுப்பையா, ரவிச்சந்திரன், சங்கர், செல்வராஜ், பூசை பாண்டியன், மயில்வாகனன், நவமணிபாண்டியன், கோமதி ராஜ், பாலசுப்பிர மணியன், முத்தமிழ் செல்வ ன், அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணித் தங்கம் நன்றி கூறினார்.

    Next Story
    ×