என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம்
- ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏகாம்பரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன், காமாட்சியம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story