என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனத்திலிருந்து விழுந்த முதியவர் சாவு
- வாகனத்திலிருந்து விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- மது போதையில் வந்த போது சம்பவம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட வைத்தியநாதபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராசு (வயது 65). இவர் நேற்று மாலை வீமது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பெருமத்தூரில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story