என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாராயம் தயாரிக்க 80 லிட்டர் ஊறல் போட்ட விவசாயி கைது
Byமாலை மலர்7 Oct 2022 9:46 AM GMT
- சாராயம் தயாரிக்க 80 லிட்டர் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்
- ஒகளூர் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குன்னம் தாலுகா, ஒகளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கரும்பு தோட்டத்தில் ஒகளூர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவர் சாராயம் தயாரிக்க பேரலில் போடப்பட்டிருந்த 80 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவை அதே இடத்தில் அழிக்கப்பட்டன. இதையடுத்து கருப்பையாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்."
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X