search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி
    X

    அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி

    • அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது
    • 50க்கும் மேற்பட்ட மூலிகைகள் இடம் பெற்றன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் து.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நொச்சி, வில்வம், கல்தும்பட்டு இலை, சிறியா நங்கை, தூதுவளை, சிறுநெருஞ்சில், துத்தி, முடக்கறுத்தான், ஓமவள்ளி, கல்யாணமுருங்கை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மூலிகைகள், பல்வேறு பாரம்பரிய தாவரங்கள், கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நமது பாரம்பரிய நாட்டு மருத்துவம், இயற்கை மருத்துவ குணம் மிகுந்த தாவரங்கள் குறித்து அறிந்து கொள்ள இக்கண்காட்சி உதவியாக இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×