என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 வீடுகளில் நகைகள்-பணம் கொள்ளை
- 2 வீடுகளில் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கம்மாள் நகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 37). பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் குடும்பத்துடன், அதே பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
ஜெயராமன் துபாயில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதால், பெரம்பலூரில் உள்ள வீட்டில் திவ்யா(34) தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி திவ்யா வீட்டை பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, நெய்குளத்தில் உள்ள தனது அண்ணன் பொய்யாமொழி வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்கு கலைவாணன் சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் மட்டும் திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.15 மணிக்கு கலைவாணன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் சாவியால் திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்று ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அவர் உடனடியாக தரைதளத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கேயும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கலைவாணன் இதுகுறித்து திவ்யாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது அவரது வீட்டிலும் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம், 4 ஜோடி வெள்ளிக்கொலுசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கலைவாணனும், திவ்யாவும் இது குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்