search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை கொலை செய்த மகன் கைது
    X

    தந்தையை கொலை செய்த மகன் கைது

    • தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்
    • கீழப்புலியூர் கிராமத்தில் குடிபோதையில் விபரீதம்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராம காலனி தெருவில் வசிப்பவர் சுப்பராயன் மகன் சக்கரவர்த்தி (வயது 59) இவரது மகன் சதீஷ் (28) கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று மதியம் சதீஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தந்தை சக்கரவர்த்தியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் திடீரென சதீஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சக்கரவர்த்தியை நெஞ்சில் குத்தியுள்ளார்.

    இதில் அவர் ரத்தம் வெள்ளத்தில் மயக்கம் அடைந்து விட்டார் . பின்னர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். 108-ல் வந்த நபர்கள் சக்கரவர்த்தியை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வந்த மங்களமேடு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவல்துறையினர் சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்சை கைது செய்தனர்.

    Next Story
    ×