search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைய பிரார்த்தனை
    X

    தர்காவில் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை செய்தார்.

    மீண்டும் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைய பிரார்த்தனை

    • தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து 31-வது மாவட்டமாக மயிலாடுதுறைக்கு வருகைதந்துள்ளேன்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்திடவேண்டும் என அவை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன் ஆன்மிக பயனமாக சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.

    அதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைதலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், நகரசெயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகைதந்துள்ளேன்.

    எம்ஜிஆர்.ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார்.

    இதுதொடரவேண்டும் என்றார்.

    Next Story
    ×