search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜமாபந்தியில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடையலாம்: மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜமாபந்தியில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடையலாம்: மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×