search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம்
    X

    அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம்

    • அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது
    • பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்புனவாசல் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரட்டை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    முதல் தேரில் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் சாமியும், 2-வது தேரில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருளச் செய்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தது. திருத்தேர்களில் அமர்ந்திருந்து விருதபுரீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆலயத்தைச் சுற்றிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×