search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து பெய்ண்டர் சாவு
    X

    மின்சாரம் பாய்ந்து பெய்ண்டர் சாவு

    • மின்சாரம் பாய்ந்து பெய்ண்டர் உயிரிழந்தார்
    • பணி செய்து கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் கார்த்திக் (வயது 26) பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த சபரிராஜன் உட்பட 4 பேர் அன்னவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றனர்.

    வீட்டின் பின்புறத்தில் கார்த்திக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த சபரிராஜன் அவரை காப்பாற்ற முற்பட்டார். இதில் கார்த்திக் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சபரிராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே சக பணியாளர்கள் சபரிராஜனை மீட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×