search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • ஆலத்தூர் அருகே சென்ற போது விபத்து
    • மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கானாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 26). இவர், மீமிசல் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது பாலசுப்ரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×