search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

    திருத்துறைப்பூண்டியில், வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி கால்நடை மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி கால்நடை அரசு மருத்துவ மனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    நகராட்சிஆணையர் (பொ), கால்நடை மருத்துவர்கள் சந்திரன், இலக்கியா ராஜசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் வி.ஐ.ஏ. ஷிப் கேட்டரிங் காலேஜ் பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கால்நடை மருத்துவ மனைக்கு வந்தடைந்தது.

    இதில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    Next Story
    ×