search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
    X

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாளை (3-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு வைத்து கட்சித் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்திடவும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியம், நகர, பேரூர் கழகம், கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், மாணவ- மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    "என்றென்றும் கலைஞர்" என்ற தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டங்களும் வெகு நடத்தப்பட வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×