search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்து
    X

    கன்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்து

    • 3 பேர் பலி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    சென்னை அடையாறு பகு தியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரச வத்தில் பிறந்தவர்கள்.

    தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.

    மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண் டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதிலாரிக்கு அடியில் புகுந் தது.

    இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபா டுகளுக்குள் சிக்கி கார் டிரை வர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தர ணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் விட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலைகளை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக வாலாஜா அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×