search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரமோகன், இணை செயலாளர் சந்தியா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணை செயலாளர் சித்ரா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பரமசிவம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில செயலாளர் சுமதி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சேகர், ஜோசப் கென்னடி, பாபு, பருதி இளம்வழுதி, புஷ்பராஜ் மற்றும் சத்துணவு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×