search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தி நிறைவு விழா
    X

    ஜமாபந்தி நிறைவு விழா

    • நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×