search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடு புகார் ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்.

    முறைகேடு புகார் ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு

    • டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது, பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி மற்றும் டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது ரேசன் கடை விற்பனையாளர் ஜெயக்குமார் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து ஜெயக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் அவர்மீது உத்தமபாளையம் குற்றப்புலனாய்வுத்துறை குடிமைப்பொருள் வழங்கல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×