search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைப்பாதை வழியாக சாலை அமைக்க கோரிக்கை
    X

    மலைப்பாதை வழியாக சாலை அமைக்க கோரிக்கை

    • 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அள்ளியை அடுத்த கோமேரிக் கொட்டாய் கிராம மக்கள் பொம்மிடி பகுதியில் இருந்து விவசாய வேலைகள், பள்ளி, கல்லூரிகள் என சென்று வருகின்றனர். பொம்மிடி மற்றும் கோமேரிக்கொட்டாய் இடையே வனப்பகுதியில் மலை சாலையை கடந்து இப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர்.

    இந்த மலைப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், இந்த பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றி வருகின்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த 4 கிலோமீட்டர் உள்ள மலை சாலையை இணைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவர் கிரீட் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக இந்த வனப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகள் முடிவடைந்த உடன் இந்த சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது.

    இந்த சாலை இருந்தவரை பொதுமக்கள் அதை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று மலைப் பகுதியில் தருமபுரி-பொம்மிடி மற்றும் தருமபுரி-சேலம் மாவட்டத்தை இணைக்கும் மலை பாதை அமைய உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது "தற்போதைய சூழலில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சூழலில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை பாதையில் 2 கிலோமீட்டர் சாலை அமைத்து தருமபுரி மற்றும் பொம்மிடி பகுதிகளை இணைக்க முடியவில்லை என்றால் வியப்பாக உள்ளது.

    இங்குள்ள விவசாய கூலி தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் இந்த 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வருவது இதனால் குறையும்.

    சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்த சாலை பணிகளை உடனடியாக அமைக்க தனி கவனம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே பாதையில் பவர் கிரேட் மின் பாதை அமைக்க அனுமதி அளித்து, அதற்கான கோபுரங்களும் நிறுவப்பட்டு, தற்போது செயல்பாட்டிலும் வந்துள்ளது.

    ஆனால் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இது வழித்தடத்தில் சாலை அமைக்க அனுமதி அளிக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது" என தெரிவித்தார்.

    Next Story
    ×