search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்று நடும் விழா
    X

    கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் லலிதா மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    மரக்கன்று நடும் விழா

    • கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.
    • முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆச்சாள்புரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லலிதா கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டம் என்பது அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கடந்த 3 மாதத்தில் என்னென்ன செய்யப்பட்டன மேலும் எப்பணிகள் மேற்கொள்ள ப்படவுள்ளது என்பது போன்ற முக்கிய பொருட்கள் தெரியப்படுத்தப்படும்.

    இதுவரை கிராம சபைக் கூட்டம் குடியராசு தினம் ஜனவரி 26, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 என வருடத்திற்க்கு 4 முறை நடைபெற்று வந்ததை முதலமைச்சர் தற்போது கூடுதலாக உலக தண்ணீர் தினம் மார்ச் 22 மற்றும் உள்ளாட்சி தினம் நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்திரவிட்டுள்ளார்கள்.

    ஆக மொத்தம் வருடத்திற்க்கு 6 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

    கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.

    மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் அரசின் முக்கிய திட்டங்களை பற்றி நன்கு அறிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    பெண் கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

    எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை அக்கறை கொண்டு பள்ளிக்கு அனுப்பிவைத்து உயர் கல்வி பயில ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர்உமாமகேஸ்வரி சங்கர், இணை இயக்குநர் (வேளாண்மை)சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஸ்ரீதர், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரெஜினா ராணி, அருண்மொழி, ஆச்சாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்தை யல்நாயகி கலியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×