search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
    X

    எஸ்.புதூரில் ரேசன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டார்.

    வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு

    • ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×