search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா
    X

    விளையாட்டு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • குதிரையேற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலை யன்கோட்டை யில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கர வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார்.முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், அழகப்பா பல்கலை கழக உடற்கல்வி கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் முரளி ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்ற ப்பட்ட பின்பு கல்லுரியின் குதிரை யேற்ற பயிற்சி யாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்.தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா வேளான் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி யின் உதவி உடற்கல்வி இயக்குனர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தி னர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், மாணவர்களின் தன்னம் பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனையாளர்க ளின் வாழ்க்கை நிகழ்வு களை கூறினார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்க ளுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.

    Next Story
    ×