என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்
கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜை
- கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரச்சை பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படையல் வைத்து சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி, தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி மகாராஜா, மாரிஸ் வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.