search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிய விதிமுறைகளை கடைபிடிக்காத விதை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை-அதிகாரி எச்சரிக்கை
    X

    உரிய விதிமுறைகளை கடைபிடிக்காத விதை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை-அதிகாரி எச்சரிக்கை

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்கு னர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். விதை விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் விபரம் குறிப்பிட்டு விற்பனைப்பட்டியலை தவறாமல் வாங்கிட வேண்டும்.

    உளுந்து பயிரில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் முன் அவ்விதை களின் முளைப்புத்திறனை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதித்து பின் பயன்படுத்தலாம்.

    விதை விற்பனை யாளர்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரின் பதிவுச் சான்று மற்றும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்னரே பருத்தி மற்றும் இதர காய்கறி பயிர்களின் விதைகளை விற்பனை செய்திட வேண்டும். விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள விதை இருப்பு விபரங்களை விபரப் பலகையில் தினசரி குறிப்பிட்டு விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    விதை வாங்கும் விவசாயிகளுக்கு பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் விபரம் குறிப்பிட்டு விற்பனை பட்டியல் கண்டிப்பாக வழங்கிட வேண்டும். விதைகளை முறைப்படி தனியாக காற்றோட்டமுள்ள இடத்தில் இருப்பு வைக்க வேண்டும். மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்காத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×