search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் ஒன்றியத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு- வீடு, வீடாக கணக்கெடுப்பு
    X

    மீஞ்சூர் ஒன்றியத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு- வீடு, வீடாக கணக்கெடுப்பு

    • அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.
    • மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேனகா, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் சசிகலா, அங்கன்வாடி ஆசிரியர் ரகுமாபீ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×