என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
Byமாலை மலர்2 Feb 2023 12:30 AM GMT (Updated: 2 Feb 2023 12:30 AM GMT)
- எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடி:
அரியலூர் மாவட்டம் வங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). இவருடைய தம்பி ராஜ் (23). இவர்கள் இருவரும் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அஜித்குமார், சென்னையில் ஒரு தனியார் மாலில் வேலை செய்து வந்தார். அவருடைய தம்பி ராஜ், ஆவடியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அஜித்குமார், ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X